தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
‛ஆஷ்ரம்' வெப்சீரிஸ் புகழ் நடிகை திரிதா சவுத்ரி தற்போது படங்களிலும் பிஸியாக நடிக்கிறார். அவர் நடித்துள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படமான ‛சோ லாங் வேலி', ஜூலை 25ல் தியேட்டர்களில் வெளியாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மான் சிங் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...
போலீஸாக நடித்தது பற்றி அவர் கூறுகையில், ‛‛போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பிறகு போலீஸ் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் நிறைய உழைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. அவர்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடிவது இல்லை. தங்களது கடமைக்காக நிஜ வாழ்க்கையில் நிறைய சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டி உள்ளது''.
பெண் போலீஸ் படம் குறித்து அவர் கூறும்போது, ‛‛நான் சமீபத்தில் கஜோலின் தோ பட்டி படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அதில் தனக்கு வரும் வழக்குகளை அவர் சிறப்பான முறையில் தீர்த்து வைத்தார்''.
'ஆஷ்ரம்' புகழ் நடிகை என்று அழைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரிதா, ‛‛இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, இதுபோன்று பல நடிகர்களுக்கும் நடக்கிறது. இதுதான் மக்களின் அன்பு என்று உணர்கிறேன். வரும் காலங்களில் வேறு படங்கள் அல்லது தொடர்களில் நடித்தால் அந்த படங்கள் அல்லது தொடரின் பெயரை குறிப்பிட்டு என்னை அழைக்கலாம் அல்லது அடையாளம் காணலாம் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு திரிதா கூறினார்.