விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி போன்ற படங்களை தயாரித்த நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பஸ் கரோ ஆன்ட்டி. வருண் அகர்வால் எழுதிய நாவலை தழுவி உருவாகிறது. அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது: இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பற்றியது. மற்றும் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் இறங்கி முயற்சிப்பது மற்றும் ஒருவரின் கனவுகளைத் துரத்துவது எனும் வாழ்க்கை முறையில், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் காதல், அவர்களின் இக்கட்டான நிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
இளம் இந்தியாவின் ஆர்வத்தையும் தொழில்முனைவோரின் உணர்வையும், நகைச்சுவை நிறைந்த, ஊக்கமளிக்கும் கதையாக இப்படம் சொல்கிறது. யதார்த்தமான காட்சிகளால் படம் நிறைந்திருப்பதால் இது அடல்ட் கண்டன்ட் வகை படமாகிறது. என்றார்.