துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பிரபல ஹிந்தி நடிகரான அக்சய் குமாருக்குக் கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கொரானோவால் பாதிக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரானோ பாசிட்டிவ் வந்து விட்டது. நான் ஓய்வெடுக்க வேண்டும். அனுராக் தாக்கூர் மற்றும் நமது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அங்கு இருக்கும் வாய்ப்பைத் தவறிவிடுகிறேன்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அக்சய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.