சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தாங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதை பல ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்ட சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவர் பெண்களை மையப்படுத்தி, கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் இதற்கு பின்னணியில் நெகிழவைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
இதுபற்றி அர்ஜூன் ராம்பால் கூறும்போது, “இப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னுடைய தாய்க்கு செலுத்தும் காணிக்கையாக தருகிறேன். தந்தை இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று என்னை வளர்த்து ஆக்கியவர் என் தாய்” என்று கூறியுள்ளார். இவரது தாய் புற்றுநோய் காரணமாக கடந்த 2018 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.