புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தாங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதை பல ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்ட சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவர் பெண்களை மையப்படுத்தி, கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் இதற்கு பின்னணியில் நெகிழவைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
இதுபற்றி அர்ஜூன் ராம்பால் கூறும்போது, “இப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னுடைய தாய்க்கு செலுத்தும் காணிக்கையாக தருகிறேன். தந்தை இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று என்னை வளர்த்து ஆக்கியவர் என் தாய்” என்று கூறியுள்ளார். இவரது தாய் புற்றுநோய் காரணமாக கடந்த 2018 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.