மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தன் மகன் மீது கவனம் வைத்து வளர்க்கவில்லை என அவரது ரசிகர்களிடையே ஒரு பிரிவினர் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜு என்பவருக்கும், ஹைதர் மக்பூல் என்பவருக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஷாருக்கான் போலவே நடித்து ஆடி பார்வையாளர்களை கவர்ந்து அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வந்தார்கள். இந்த நிலையில் ஆர்யன்கான் விவகாரத்தில் ஷாருக்கான் தற்சமயம் நெகட்டிவ் கமெண்டுகளை சந்தித்து வருவதால் இந்த இருவரையும் தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறி விட்டனராம். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கில் இருந்து தற்போதுதான் மீண்டும் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இது என்னடா புது சோதனை என இருவரும் புலம்பி வருகின்றனர்.