மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்பு அது குணமானது. தற்போது தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அது குணமானதும் இரண்டு தடுப்பூசியும் உரிய இடைவெளியில் போட்டுக் கொண்டேன். ஆனாலும் இப்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்கிறார்.