சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
குடும்பமாக பார்க்கலாம் என்ற கேரண்டி தரக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இந்த இயக்குநரும், நடிகருமானவர். திடீரென இவர் பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியில் வந்ததால் தப்பித்துக் கொண்டார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழின் முன்னணி நாயகன் ஒருவரை இயக்குவதாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவரது படத்தை இயக்குவார் எனப் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அந்தக் குறிப்பிட்ட படம் பற்றிய அப்டேட் வராமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட வேலைகள் தாமதம் ஆவதற்கு கொரோனா மட்டுமல்ல, நாயகன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நாயகன், வில்லன் என தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வரும் மக்களுக்குப் பிடித்தமான அந்த நடிகர், இந்தப் படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். அடுத்தாண்டாவது இவர்கள் இணைந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இவர்களது காம்போவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.