மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
குழந்தைப் பருவத்தில் சினிமாவில் அறிமுகமானவர் சுஜிதா. பூவிழி வாசலிலே, முந்தானை முடிச்சு என, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் வெளியான 'பாண்டியன் ஸ்டோர்' (முதல் பாகம்) நாடகத்தில் தனமாக வந்து, இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தெலுங்குபாளையத்தில் நடந்த வீட்டுமனை நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக வந்த இவரை சந்தித்து பேசினோம்.
திரைப்படம், நாடகம் என, வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கி விட்டதால், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என்ற பெரிய வித்தியாசம் எனக்கு தென்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப, ரசனை மாறியிருக்கிறது. பொதுமக்களின் ரசனையை தெரிந்துக் கொண்டு, நம்மை தயார்படுத்தி, நடிப்பை வித்தியாசமாக கொடுக்க வேண்டும். அப்போது, பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரே மாதிரியாக இருந்தால், நடிப்பவர்களுக்கும், அதை பார்க்கும் பொதுமக்களுக்கும் ஒரு விதமான சோர்வு வந்து விடும்.
சினிமாவில் மாற்றம் வருகிறது; நாடகங்களில் நிறைய மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்குமே?
சினிமாக்களின் நேரம் இன்று வெகுவாக குறைந்து விட்டது. வித்தியாசமாக கதைக்களம் கொண்ட சினிமாக்களை, பல மொழிகளில் பார்த்து வருகிறோம். அதுபோல், நாடகத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள், பெரியவர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு நிமிட 'ரீல்ஸ்' பிடிக்கவில்லை என்றாலும், அதை நகர்த்தி விடுகின்றனர். எல்லாமே சவாலாக இருக்கிறது.
பல தொடர்களை பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறதே?
ஒரே மாதிரியான தொடர்கள் கொடுத்தால், பார்ப்பவர்களுக்கும் சலிப்பு தட்டி விடும். எனவே, தொலைக்காட்சி தொடர்களை, பொதுமக்களுக்கு பிடிக்கும் வகையில், குழுவினர், நாளுக்கு நாள் அபரிமிதமான உழைப்பை தர வேண்டியுள்ளது.
இப்போது நடக்கும் தொடர்கள் குறித்து...
மலையாளத்தில் 'அர்ச்சனா சேச்சி' என்ற தொடரில், நடிக்க உள்ளேன். கால நேரம் பார்க்காமல் உழைத்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டால், வாழ்க்கைக்கு அது நல்லது.