Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி

20 ஜூலை, 2025 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Chayadevi-exclusive-interview


பச்சிளம் குழந்தையின் கண்கள், அழகே நின்று ரசிக்கும் பெண்மை மெல்லிய சிரிப்பால் சொக்க வைக்கும் முழுமதி முகம் உடையவள். தனது நடிப்பு திறமையால் வேற்று மொழிகளிலும் பிரபலமாகி இளைஞர்களை ரசிகர் பட்டாளமாக்கிய நடிகை சாயாதேவி நம்முடன் பகிர்ந்தது...

14வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறேன். கதாநாயகியாக அறிமுகமான 'கன்னிமாடம்' திரைப்படம் சினிமா வட்டாரத்தில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 'டி.எஸ்.பி.,' படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாகவும், அடுத்ததாக 'சார்' படத்தில் கதாநாயகியாக நடித்தேன். தந்தை பிரபல இயக்குனர் (யார் கண்ணன்) என்பதாலும், தாய் நடன மாஸ்டர் (ஜீவா) என்பதாலும் சினிமா வாய்ப்பு சற்று எளிதாக கிடைத்தது.

ஆனால் முதல் முறையாக திரைப்படத்தில் நடித்த அனுபவம் நாளடைவில் காதலாக மாறி சினிமாவிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சினிமாவை பார்த்து வளர்ந்து இருந்தாலும் முதல் நாள் கேமரா முன்பு நிற்கும் போது பயம் கலந்த உணர்வு இருந்தது. இதை கடந்து தற்போது தொடர்ந்து கற்றுக்கொண்டே நடித்து வருகிறேன்.

அண்மையில் வெளியான 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் நடித்த பின்பு தான் எனக்கு அரசியல், மதம் குறித்த சரியான தெளிவு ஏற்பட்டது. இப்படத்தின் நோக்கம் மதம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி யாரையும் கஷ்டப்படுத்துவதாக இல்லாமல் மதச்சார்பற்ற நாடு என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுத்துவதாக இருக்கும்.

இந்த படத்தில் விமல் கதாநாயகன் என்பது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது தான் தெரியும். இவர் எப்போதும் கல்லுாரி நண்பரை போல நன்றாக பேசி உடன் இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருப்பார் என்பதால் படப்பிடிப்பில் எல்லோரும் ஜாலியாகவே இருப்பார்கள்.

'மாமன்' திரைப்படத்தில் சூரியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், அவருடன் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் கதாபாத்திரம் குறித்து எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு நேரத்தில் வைத்து தான் சூரியின் முன்னாள் காதலி கதாபாத்திரம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். அவருக்காக கதாபாத்திரம் எதுவும் கேட்காமல் நடித்த திரைப்படம்.

6 வயதில் இருந்து 6 ஆண்டுகள் பரதநாட்டியமும், அதன் பின் கதகளியும் கற்றுக்கொண்டேன். பொதுவாக நடனம் நன்றாக தெரிந்த எந்த நடிகைகளுக்கும் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்புகள் வராது என கூறுவார்கள். ஆனால் என்னுடைய நடனத்திறமையை வெளிப்படுத்த சரியான பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கன்னிமாடம் திரைப்படத்தை பார்த்து நீங்கள் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்றும், கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பத்தால் ராம்பஜூலு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளேன்.

இப்படத்தின் படப்பிடிப்பில் மொழி தெரியாததால் வசனம், முகபாவனை குறித்து எதுவும் தெரியவில்லை. எனக்காக தமிழில் வசனங்களை ஆடியோவாக பதிவு செய்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து, படக்குழுவினர் நன்றாக பார்த்துக்கொண்டனர். படப்பிடிப்பின் போது வசனங்களை பேசி நடித்ததால் நானே டப்பிங் செய்து வருகிறேன்.

நடிகை, நடனக்கலைஞர் ஷோபனாவுடன் ஒரு தடவையாவது நடிப்பு, நடனம் எதாவது ஒன்றில் இணைய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உள்ளது. பயணம் செய்வது மிகவும் பிடிக்கும், வரும் காலங்களில் உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்புகிறேன். அதில் ஆன்மிகம் குறித்த தேடல் அதிகமாக இருக்கும்.

நமக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும் தொடர்ந்து உழைத்து, கற்றுக்கொண்டே இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கடைசி மூச்சு வரை சினிமாவில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

முதல் முறையாக திரைப்படத்தில் நடித்த அனுபவம் நாளடைவில் காதலாக மாறி சினிமாவிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யாவில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: ... தரன் தரும் தரமான இலக்கியம் தரன் தரும் தரமான இலக்கியம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in