படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் நமிதா மாரிமுத்து வெளியேறிவுள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. நமிதாவின் சோகக்கதையை கேட்ட பலரும் அவருடைய அனுதாபியாக மாறியிருந்தார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா போட்டியை விட்டு விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் இது பற்றி பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி, ஏன் நானும் கூட நமிதா மாரிமுத்துவிடம் மனதை பறிகொடுத்துவிட்டோம். இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமிதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கமல் கூறியுள்ளார். காரணங்கள் சரிவர தெரியாத நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.