'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் நமிதா மாரிமுத்து வெளியேறிவுள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. நமிதாவின் சோகக்கதையை கேட்ட பலரும் அவருடைய அனுதாபியாக மாறியிருந்தார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா போட்டியை விட்டு விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் இது பற்றி பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி, ஏன் நானும் கூட நமிதா மாரிமுத்துவிடம் மனதை பறிகொடுத்துவிட்டோம். இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமிதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கமல் கூறியுள்ளார். காரணங்கள் சரிவர தெரியாத நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.