மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய பிரபலமாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக்கிளி தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன்பின் திடீரென அந்த தொடரிலிருந்து விலகினார். நீலிமா தான் இரண்டாவது முறை கர்பமாக இருப்பதை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவிந்து வந்தனர்.
அவர் தற்போது தனது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக சீரியல் நடிகைகள் பரீனா மற்றும் சமீரா தங்களது கர்ப்ப கால புகைபடங்களை வெளியிட்ட போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது. தற்போது நீலிமாவின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'கர்ப்ப காலத்தில் எப்படி அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு சீனியர பாத்து கத்துக்கோங்க' என பரீனா, சமீராவுக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.