32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா தற்போது சீரியலிலிருந்து விலகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொடர் புதுமுக நடிகர்/நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்பை கொடுத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் நாயகனின் அம்மாவாக சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை மாளவிகா. இந்திய அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான கே.ஜி.எப் படத்தில் ஜார்னஸ்ட் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த மாளவிகா, தென்னிந்திய மொழிகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கே.ஜி.எப் 2, ருத்ரதாண்டவம், எனிமி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. காற்றுக்கென்ன வேலி தொடரிலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாரதா கதாபாத்தித்தில் புது நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.