சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சின்னத்திரை சங்கத்தின் நிர்வாக குளறுபடியால் சங்கத்திற்கு பூட்டு போட்டு, காவல்நிலையத்தில் புகார் தரும் அளவுக்கு களேபரம் ஆகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கம் 2013ல் நடிகர் வசந்த்தால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தம் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டு போட தகுதியுள்ளவராவர்.
2018 இறுதியில் தேர்தல் நடந்தபோது, ரவிவர்மா தலைவராக தேர்வானார். 2019 இறுதியில் மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் ரவிவர்மா மீது பணம் கையாடல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நிர்வாகிகளிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், சங்கத்தை கலைத்து, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ஒரு தரப்பினர் தீர்மானம் இயற்றினர். ரவிவர்மா தரப்பிலோ, தலைவர் பதவியை விட்டு விலகாமல் மல்லுக்கட்ட, சங்கத்திற்கே பூட்டு போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி, ‛நிர்வாகம் கலைக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரியை வைத்து பொதுக்குழு கூட்டி கணக்கு வழக்குகளை கொடுத்து தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்' என, காவல்துறை முன் நிர்வாகத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த விவரம் இன்னும் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, மீண்டும் சங்கத்தில் களேபரம் ஆரம்பமாகியுள்ளது.