ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தொலைக்காட்சி நடிகை நேஹா மேனன், தன்னை பாடி ஷேமிங் செய்த எட்டாயிரம் பேரை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் செய்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா மேனன் தற்போது விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த நேஹா இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான நபராக வலம் வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களில், அவர் குண்டாக இருப்பதை சிலர் கேலி செய்து வந்துள்ளனர். அதற்கு அவர் பதிலடியும் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேஹா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். அம்மாவிடம் தான் என் வேதனைகளைக் கொட்டுவேன். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் அம்மா தான். நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது. ஏதாவது நெகட்டிவ் கமென்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது.” என கூறியுள்ளார்.




