வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது அழகின் ரகசியம் பற்றி கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் நடித்து வருகிறார். தனது குறும்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது தனது அழகுக்கான காரணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலிருந்தே தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் எனது வழக்கம் . அதை தவிர பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், இப்போது ஷூட்டிங் காரணமாக ஏரளமான சரும பிரச்னைகள் வருகின்றன. சருமத்தை பாதுகாக்கும் ரகசியத்தை இப்போது தான் கண்டுபிடித்தேன். சருமத்திற்கு முல்தானி மட்டி, தலைமுடிக்கு ஆட்டுப்பால் கலந்த தேங்காய் எண்ணெய். இதை நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா எனக்கு தந்தார். டயட்டுக்கு இண்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்டுகள் ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.