மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து வெளியேறிதற்கான காரணத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த ஜெனிபர். தற்போது மற்றொரு முக்கிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி என்ற சீரியலில், ராதிகா எனும் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார் . இந்த கதாபாத்திற்காக ஜெனிபருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகியது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெனிபர், ராதிகா கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் நெகடிவ் கேரக்டராக மாற இருக்கிறது. எனவே, அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என தெரிவத்திருந்தார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சீரியலிலிருந்து விலகியதற்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். தனது குடும்பத்தில் வரவிருக்கும் மற்றொரு உறுப்பினரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஜெனிபருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.