புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். தமிழாக தீபக் நடிக்கிறார். மீரா கிருஷ்ணன் - தமிழின் தாயாகவும் , ராமச்சந்திரன் - தமிழின் அப்பாவாகவும் நடிக்கிறார்கள், பிரபு - சரஸ்வதியின் அப்பாவாகவும், ரேகா - சரஸ்வதியின் அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தர்ஷனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சரஸ்வதி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண். ஆனால் சரஸ்வதிக்கு படிப்புதான் ஏறாது. பிளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் பாசாகாதவர். இதனால் அப்பாவின் அர்ச்சனையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
தமிழ் என்ற தமிழ்செல்வன் படிக்கும் ஆர்வம் கொண்டவர், ஆனால் அதற்கான வசதி இல்லாதாவர். இதனால் படிக்காத தன் மகனுக்கு படித்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கிறார் அவரது தாயார். இப்படி வெவ்வேறு துருவங்களான சரஸ்வதியும், தமிழும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தொடரின் கதை.
கொரோனா காலத்திலும் சுறுசுறுப்புடன் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகளால் 20 எபிசோட் வரை தயாராகி விட்டது என்கிறார்கள். வருகிற 12ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சேனல் அறிவித்துள்ளது.