விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சின்னத்திரை நட்சத்திரங்கள் அவினாசும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர் ஆனந்தி. இவர்களுடன் விசித்ரா, நிரோஷா, டாக்டர் கிரி, கரோலின், துர்கா ஆகியோரும் நடிக்கிறார்கள். பத்மாவதியின் கதையை சாய்மருது இயக்குகிறார்.
ஆனந்தி (ஐஸ்வர்யா)மற்றும் வருணின் (அவினாஷ்) ஆகியோரின் முழுமையான காதல் கதை. தந்தை இல்லாத குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய ஆனந்தி, வருணைக் காதலிக்கிறாள். இரு குடும்பங்களிலும் நிலவும் பிரச்சினைகளைத் தாண்டி, இருவரின் காதலும் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. அனைத்து தடைகளையும் உடைத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
குடும்ப செண்டிமென்ட் நிறைந்த இளமை ததும்பும் காதல் கதை. கடந்த திங்கள் முதல் (ஏப்ரல் 19) ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.