பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரை நட்சத்திரங்கள் அவினாசும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர் ஆனந்தி. இவர்களுடன் விசித்ரா, நிரோஷா, டாக்டர் கிரி, கரோலின், துர்கா ஆகியோரும் நடிக்கிறார்கள். பத்மாவதியின் கதையை சாய்மருது இயக்குகிறார்.
ஆனந்தி (ஐஸ்வர்யா)மற்றும் வருணின் (அவினாஷ்) ஆகியோரின் முழுமையான காதல் கதை. தந்தை இல்லாத குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய ஆனந்தி, வருணைக் காதலிக்கிறாள். இரு குடும்பங்களிலும் நிலவும் பிரச்சினைகளைத் தாண்டி, இருவரின் காதலும் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. அனைத்து தடைகளையும் உடைத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
குடும்ப செண்டிமென்ட் நிறைந்த இளமை ததும்பும் காதல் கதை. கடந்த திங்கள் முதல் (ஏப்ரல் 19) ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.