32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ராஜ் தொலைக்காட்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் (ஏப்ரல் 19) ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் நீ வருவாய் என. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்கி, ஸ்ருதி, நளினி, ரோஜாஸ்ரி, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரியாவின் கதையை நாகரசன் இயக்குகிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் கவுரி. தன் முழு குடும்பத்தையும் அவர் தான் சுமக்கிறார். அவருக்கு உதவுகிறார் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அண்ணபூரணி. கவுரியின் நல்ல குணத்தால் ஈர்க்கப்படும் அண்ணபூரனி. அவளை தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவுரி, அண்ணபூரணியின் இரண்டாவது மகனை மணக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.