தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
மிஷ்கின் இயக்கிய முதல் படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி. பிறகு இதே பெயரில் ஜெயா டி.வியில் ஒரு தொடர் ஒளிபரப்பானது. தற்போது அதே பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது.
இன்று (ஏப்ரல் 19) தொடங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் அசோக் பாண்டியன், தீபிகா, தரணி, பாபுராஜ், ஸ்வேதா நடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி அக்கிரமங்களை தட்டி கேட்க நினைக்கும் தங்கமயில் என்ற பெண்ணின் கதை. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமயிலின் அப்பா ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி. அப்பா, மகளுக்கு இடையிலான மோதலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தரும் தொடராக உருவாகி உள்ளது. "விதியை வெல்லும் சித்திரமாக வருகிறாள் தங்கமயில்" என்றே விளம்பரம் செய்கிறார்கள்.