தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
மிஷ்கின் இயக்கிய முதல் படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி. பிறகு இதே பெயரில் ஜெயா டி.வியில் ஒரு தொடர் ஒளிபரப்பானது. தற்போது அதே பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது.
இன்று (ஏப்ரல் 19) தொடங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் அசோக் பாண்டியன், தீபிகா, தரணி, பாபுராஜ், ஸ்வேதா நடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி அக்கிரமங்களை தட்டி கேட்க நினைக்கும் தங்கமயில் என்ற பெண்ணின் கதை. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமயிலின் அப்பா ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி. அப்பா, மகளுக்கு இடையிலான மோதலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தரும் தொடராக உருவாகி உள்ளது. "விதியை வெல்லும் சித்திரமாக வருகிறாள் தங்கமயில்" என்றே விளம்பரம் செய்கிறார்கள்.