ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள லாஸ்லியா, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வு பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தனது அப்பாவை மிகவும் நேசித்த லாஸ்லியா, ''அப்பாவின் மறைவு நாங்கள் எதிர்பார்க்காதது. கடைசியாக நான் எனது அப்பாவை பார்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அதன்பின் அவரை நான் பிணமாக தான் பார்த்தேன். கன்னடாவுக்கு சென்ற எனது அப்பா அங்கேயே இறந்துவிட்டார். அவரது உடலை நேரடியாக இலங்கைக்கு தான் கொண்டு வந்தார்கள். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் சில நாட்கள் கழித்து தான் கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வந்ததால் போலீஸார் எனது அப்பாவின் உடலை எங்களிடம் தர மறுத்துவிட்டனர்.
இரவு 2 மணிக்கு தனி ஒரு பெண்ணாக போலீஸிடம் போராடினேன். தனியாக இருப்பதால் பாவம் பார்த்து அப்பாவின் உடலை என்னிடம் தர சம்மதித்தனர். அதன்பிறகு தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று காரியம் செய்தோம். அந்த கஷ்டம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது'' என்று தந்தையை நினைத்து மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியுள்ளார்.