யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
சீரியலில் உச்சம் தொட்ட நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கேப்ரில்லா செல்லஸ். கருப்பழகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், நடிப்பின் மீதிருந்த தீரா காதலால் சென்னைக்கு வந்தார். சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு சின்னத்திரை சீரியலான சுந்தரி மிகப்பெரிய அளவில் பெயர் புகழை பெற்று தந்தது.
சுந்தரி சீசன் 1 முடிந்த பிறகு சீசன் 2 வில் நடிக்க ஆரம்பித்த அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த சீரியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கேப்ரில்லாவின் கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறுயாரும் செட் ஆகமாட்டார்கள் என்பதால் அந்த சீரியலையே முடித்து வைத்துவிட்டனர். சுந்தரி சீசன் 2 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்ட கேப்ரில்லாவுக்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுந்தரி சீரியல் குடும்பத்தினர் கேப்ரில்லாவின் சொந்த ஊருக்கே சென்று அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சுந்தரி சீரியலில் கேப்ரில்லாவுக்கு மகளாக நடித்த தமிழ் பாப்பாவை கூட அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனம் நெகிழ்ந்த கேப்ரில்லா இதனை தனது இன்ஸ்டாகிராமில் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் கேப்ரில்லாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.