எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய தொடர்களின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த பவித்ராவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதே வரவேற்பும் ஆதரவும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் நடிகைகள் பலர் அதன்பின் சினிமாவிற்கு சென்று விடுவார்கள். அதேபோல பவித்ராவும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தர்ஷனா, ஷ்யமந்தா, அஸ்வின், சந்தோஷ் ஆகியோருடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனால், அவர் ரஞ்சனி தொடரில் எண்ட்ரி கொடுக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பவித்ரா இதுவரை எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அதேசமயம் பவித்ராவின் தோழி ஷ்யாமந்தா கிரண் ரஞ்சனி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரை காண பவித்ரா அங்கு சென்ற போது தான் சக நடிகர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களோ பவித்ராவை மீண்டும் சின்னத்திரையிலேயே நடிக்க சொல்லி ரிக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.