‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தற்போது டப் போட்டியாளராக மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற மஞ்சரி எலிமினேட் ஆகி இருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மிகவும் அருமையாக விளையாடி வந்த மஞ்சரிக்கு ஆரம்பம் முதலே பிக்பாஸ் கருணை காட்டவில்லை.
இதற்கிடையில் டாப் 5 போட்டியாளர்களில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது வெளியேறி இருக்கிறார். மஞ்சரி வெளியேறும் போது தன் மகனுக்காக டிராபியை உடைக்காமல் கொண்டு செல்ல பிக்பாஸிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதை பிக்பாஸ் மறுத்துவிடவே மஞ்சரி கணத்த இதயத்துடன் டிராபியை உடைத்துவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸை விமர்சித்தும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.