ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சின்னத்திரையில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பாபூஸ். பல வருடமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது சின்னத்திரை தான். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'ஜோசியர் ஒருவர் ஒரு பெண்ணால் என் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைக்கும். செருப்பால் அடித்தால் கூட சினிமாவை விட்டு நான் போகமாட்டேன். சினிமாவில் நான் ஒரு அடையாளம் என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 'செல்வி' சீரியல் தான் எனக்கு பெயர் புகழை கொடுத்தது.
செல்வி சீரியல் நடிக்கும் போது என் வயது 42. அதை இயக்கி தயாரித்து நடித்தது ராதிகா. அன்று மட்டும் அந்த ஜோசியரை நான் பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன்' என அந்த பேட்டியில் பாபூஸ் கூறியுள்ளார். செல்வி தொடருக்கு பின் மிகவும் பிரபலமான பாபூஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்து வருகிறது.