நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
2007ம் ஆண்டு வெளியான 'முருகா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். வானம் பார்த்த சீமையிலே, உலா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை.
சினிமா வாய்ப்புகளும், வெற்றிகளும் சரியாக அமையாத இளம் நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது புதிதில்லை. அந்த வரிசையில் தற்போது அசோக்கும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, 'மவுனம் பேசியதே' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
அவரவர் விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், பரஸ்பர விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் என இரு ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க, பேருந்து விபத்தில் சிக்குகிறது. அதில் இரு ஜோடிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியங்கள்தான் தொடரின் கதை.
அசோக் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு 'ஸ்ரீகிருஷ்ணா' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.