வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் முதல் நாளே சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. அதில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர் சந்திரசேகர், ரஞ்சித், சவுந்தர்யா அருண் பிரசாத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் யாருக்கு குறைவான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்களோ அந்த நபர் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி முன்னிலையில் எலிமினேட் செய்யப்படுவார்.
மேலும் நேற்று இந்த நிகழ்ச்சியின் கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடந்தது. அப்போது ஒருபுறம் ஆண்களும் இன்னொரு பெண்களும் உட்கார வைக்கப்பட்டு, அதில் யார் முதலிடத்தில் வருகிறார்களோ அவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் ரவீந்தர் சந்திரசேகர் முதல் நபராக வெளியேறி விட்டார். மற்றவர்கள் எல்லாம் வேகமாக ஓடி சென்று இருக்கையை பிடித்துக் கொள்ள, இவரால் தனது வெயிட்டான உடம்பால் ஓட முடியவில்லை. ஆனால் இப்படி ஓடி வந்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு வலி நிவாரணி அளிக்கப்பட்டு மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அவரை கைதாங்கலாக அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கால் வலி இருந்து வருவதால் அடுத்தபடியாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




