மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த நடிகை ஜூலி, சின்னத்திரையில் சத்யா, சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் மூலம் பிரபலமானார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். 42 வயதான ஜூலிக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகியிருக்கிறது. இப்படி பலவாறாக கஷ்டங்களை அனுபவித்த ஜூலி சென்ற வருட இறுதியில் கருவுற்றார். அவரது வளைகாப்பு நிகழ்வு அண்மையில் கோலாகலமாக முடிந்தது. இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி அவருக்கு அழகிய இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜூலி இன்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.