ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
உதிரி பூக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அஞ்சு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அஞ்சு, சிங்கப்பெண்ணே என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் குண்டாக இருந்ததால் எனக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மலையாளத்தில் என் நடிப்பை தான் பார்த்தார்கள். உடலை பார்க்கவில்லை. குஷ்புவும், மீனாவும் கூட குண்டாக தான் இருந்தார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நான் திருமணமே செய்திருக்கமாட்டேன்' என்று கூறியுள்ளார்.