விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் திரையுலகில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா சமீப காலங்களில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது மல்லி என்ற தொடரில் தனது தோழிகளான அம்பிகா மற்றும் நளினி உடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.