'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
தமிழ் திரையுலகில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா சமீப காலங்களில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது மல்லி என்ற தொடரில் தனது தோழிகளான அம்பிகா மற்றும் நளினி உடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.