விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு | 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் |

தமிழில் 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, இசைக்கலைஞர் பெனடிக் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமான வன்முறை காட்சிகளையே படமாக்கி வியாபாரம் பார்க்கின்றனர். பல பிரபலங்களை தவறாக சித்தரித்து வேதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சூழலில் என்னுடைய குழந்தையை நான் வளர்க்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.
ஆனால் ராதிகா ஆப்தேவின் இந்த கருத்துக்கு சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதாவது, 'ரத்த சரித்திரா, பத்லாபூர், சேக்ரேட் கேம்ஸ்' என அவர் நடித்த பல படங்கள் கிராபிக்ஸ் வன்முறைகளை மையமாகக் கொண்ட கதையில்தான் உருவாகி இருந்தன. அதனால் அப்படிப்பட்ட படங்களில் இவரே நடித்துவிட்டு இப்போது அதற்கு எதிராக எப்படி கருத்துக் சொல்லலாம் என்று பலரும் ராதிகா ஆப்தேவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.