ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை பிரபலமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சமூக அக்கறையுடன் தன்னால் முடிந்த வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல தான் நடிகர் லாரன்ஸும் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாலாவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய லாரன்ஸ், இனி பாலா செய்யும் உதவிகளில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர். மேலும், தற்போது கணவரை இழந்து மூன்று மகள்களை காப்பாற்றி வரும் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து அவருக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
முதல் சவாரியாக இவர்கள் இருவரும் ஆட்டோவில் அமர, முருகம்மாள் அந்த ஆட்டோவை ஓட்டி செல்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- பாலா ஆகிய இருவருக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.