ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அதன்பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த அவர் காதல் கணவருக்காக நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா கணவரை விட்டு பிரிந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்செட்டான பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போவதாக அறிவித்துள்ளார். மேலும், புரோமோஷனுக்காக சிலர் அனுப்பிய நகைகள், ஆபரணங்கள், உடைகளையும் திருப்பி அனுப்பி விடுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், பிரியங்காவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.




