மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்ததால் சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருவரும் டிரெண்டிங் ஜோடியாக இடம் பிடித்து வந்தனர். தொடர்ந்து பணமோசடி வழக்கில் கைதாகி சர்ச்சையில் சிக்கி அண்மையில் தான் வெளிவந்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து ரவீந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்ட ரவீந்தரை ரசிகர்கள் உடம்பை கவனிக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.