'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
பிரபல சின்னத்திரை நடிகர் ராகுல் ரவி. மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான் படங்களில் நடித்திருக்கும் இவர், பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். 'பொன்னம்பிளி' என்ற மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்த அவர், தமிழில் 'நந்தினி' சீரியல் மூலம் அறிமுகமானார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, 'சாக்லேட்' என்ற தொடரிலும் இவர் நாயகனாக நடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக இத்தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 'கண்ணான கண்ணே' என்ற தொடரில் நடித்தார்.
கொரோனா காலத்தில் தான் காதலித்து வந்த லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ராகுல் ரவி முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த முன் ஜாமீனுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராகுல் ரவி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.