பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
சினிமா நடிகை டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பூமிகா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காண்பித்தனர். இதன் காரணமாக டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் கசிந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டெல்னா டேவிஸ், 'அன்பே வா தொடரிலிருந்து விடைபெறுவதை நினைக்கும் போது இதயம் உணர்ச்சிகளாலும், நன்றியாலும் நிரம்பி வழிகிறது. இதுவெறும் குட்பை மட்டுமல்ல. உங்கள் அன்பிற்கும் நீங்கள் கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. என் வாழ்வில் ஒரு அத்தியாயமாக அன்பே வா தொடரின் அழகான நினைவுகள் இருக்கும். சைனிங் ஆப் பூமிகா' என்று பதிவிட்டுள்ளார்.