ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் எங்களை தவறாக பேசினார்கள்' என கூறியுள்ளார்.
மேலும், சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்களை அடுக்கிய அவர், 'ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்' என இதுபோல் பல கொடுமைகளை சீரியலில் நடிக்கும் போது அனுபவித்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.