மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது பிரியமான தோழி தொடரில் வில்லியாக அதகளம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார். எனவே, பல பேட்டிகளிலும் தன்னை சிங்கிள் மதர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தீபா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் உலாவி வந்தது. சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷும் தீபாவும் காதலித்து வந்தனர். ஆனால், பாபுவின் வீட்டில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் தீபா தனது இன்ஸ்டாகிராமில் 'என் புருஷன்' என குறிப்பிட்டு தன் கணவர் சாய்கணேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் தீபாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.