கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க முடியாது. நான் மட்டுமே உணர முடியும். ஏனென்றால் நம் இருவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது. நீ என் பாதுகவலராய் இருப்பாய். நீ என்னை விட்டு செல்ல மாட்டாய். என் உயிர் மூச்சு உள்ளவரை உன்னுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து இருப்பேன். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த துயரமான காலக்கட்டத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வர பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.