ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க முடியாது. நான் மட்டுமே உணர முடியும். ஏனென்றால் நம் இருவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது. நீ என் பாதுகவலராய் இருப்பாய். நீ என்னை விட்டு செல்ல மாட்டாய். என் உயிர் மூச்சு உள்ளவரை உன்னுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து இருப்பேன். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த துயரமான காலக்கட்டத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வர பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.