இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா அசோக் இணைந்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து ரித்திகா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், பாக்கியலெட்சுமி தொடரின் ஹீரோவான கோபி அதாவது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ரித்திகாவுடன் கற்பூரத்தை தொட்டு கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியது உண்மை தான் என்றும், அவருக்கு பேர்வெல் கொடுத்து தான் இந்த பதிவை சதீஷ் வெளியிட்டுள்ளார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் பேசி வருகின்றனர்.