நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பிரபல சின்னத்திரை நடிகையான வைஷாலி தனிகா விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்து வந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முகமாக வலம் வரும் வைஷாலி தனிகா ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார். அண்மையில், வைஷாலி தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் பயணித்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் வளைவில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'காரில் சீட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பித்தேன். இல்லையேல் பெரும் விபத்தாக மாறியிருக்கும். காரில் சீட் பெல்ட் போடுவதில் எனக்கு முதல் உடன்பாடு கிடையாது. ஆனால், இப்போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே, கட்டாயம் அனைவரும் சீட் பெல்ட் போடுங்கள். பைபாஸில், வளைவுகளில் கவனமாக செல்லுங்கள்' என தனக்கு கழுத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.