மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னையில் ஏற்கனவே கனமழை காரணமாக சாலைகள் மோசமாக இருக்கிறது. அதில், வேன் டிரைவர் ஒருவர் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பொறுப்பில்லாமல் வேகமாக செல்கிறார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே வேனை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இதைபார்த்த பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகனான நடிகரான அருண் பிரசாத் அந்த டிரைவரை மடக்கி பிடித்து மெதுவாக ஓட்டும்படி அறிவுரை செய்ய, அதற்கு அந்த வேன் டிரைவர் அருண் பிரசாத்தை அநாகரீகமாக திட்டுகிறார். இதை வீடியோவாக எடுத்துள்ள அருண் பிரசாத் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததுடன், அந்த வேன் டிரைவர் மீதும் போலீஸில் புகார் அளித்துள்ளார். அருண் பிரசாத்தின் சமூக பொறுப்பை பாராட்டி சிலர் அவர் நிஜ வாழ்விலும் ஹீரோ ஆகிவிட்டதாக வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.