மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆரம்பகாலகட்டமான 1990-களில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் அதன் தொகுப்பாளர்களும் மிகவும் பிரபலமாக வலம் வந்தனர். உதாரணத்திற்கு டாப் 10 சுரேஷ், நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி, திரைவிமர்சனம் ரத்னா ஆகியோரை சொல்லலாம். இதில், உங்கள் சாய்ஸ் பெப்ஸி உமாவிற்கு தான் அதிக ரசிகர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதளவில் பங்கேற்கவில்லை.
பல ஆண்டுகளாக ரசிகர்களும் பெப்ஸி உமா என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்? என கேட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பெப்ஸி உமா, ரத்னா, விஜய சாரதி ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரேகா நாயரும் அந்நிகழ்ச்சியின் போது பெப்ஸி உமாவை சந்தித்து பேசி அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களில் தற்போதும் அழகு குன்றாமல் ஜொலிக்கும் பெப்ஸி உமாவை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.