ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
‛செம்பருத்தி' தொடரின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை பத்ரா நாயுடு. 2020ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் கர்ப்பமானார். அப்போது கொரோனா காலக்கட்டம் என்பதாலும், சீரியலில் பிசியாக நடித்து வந்ததாலும் உடம்பை சரிவர கவனிக்காததால் பரதா நாயுடுவுக்கு அபார்ஷன் ஆனது. அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்த பரதா நாயுடு தாலாட்டு தொடரிலும், ஜீ தமிழில் ரெட்டை ரோஜா தொடரிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் பரதாநாயுடு மீண்டும் கருவுற்றிருந்த நிலையில், தாலாட்டு சீரியல் குழுவினர் அவரை சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பரதாநாயுடு, 'ரெட்டை ரோஜா தொடரில் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் அந்த சீரியலை விட்டு விலகதான் முதலில் முடிவு செய்திருந்தேன். கர்ப்பமாக இருப்பதை சொன்னால் தாலாட்டு சீரியல் குழுவினர் உதவியாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்ன பத்து நாட்களில் தாலாட்டு சீரியலிலிருந்து என் கதாபாத்திரத்தையே நீக்கிவிட்டனர். கடைசியில் எந்த சீரியலை விட்டு விலக நினைத்தேனோ அந்த ரெட்டை ரோஜா சீரியல் குழுவினர் தான் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர்' என்று கூறியுள்ளார். 8 மாதம் வரை சீரியலில் நடித்து வந்த பரதாநாயுடுக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது 9 மாத நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.