நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி ப்ரீலேன்சர் வேலையை கூட ப்ரீயாக செய்யாதீர்கள் என அறிவுரை செய்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிப்பதற்கோ, எழுதுவதற்கோ, கண்டண்ட் கிரியேட் செய்வதற்கோ, நேர்காணலுக்கோ, ஆசிரியர் பணிக்கோ, சிறப்பு விருந்தினராகவோ என எந்த வேலைக்கு என்னை அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவோம் என்று பேச ஆரம்பியுங்கள். என்னை வைத்து நீங்கள் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும். லாப நோக்கில் அல்லாமல் லட்சிய ஆர்வத்திற்காக நீங்கள் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதில் நான் இலவசமாக செய்து உங்கள் லட்சயத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், அந்த பதிவில் சில நடிகர்கள் நேர்காணல் கொடுக்க கூட பணம் வாங்குகிறார்கள் அப்படியென்றால் நான் மட்டும் என்ன முட்டாளா? என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.