மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி ப்ரீலேன்சர் வேலையை கூட ப்ரீயாக செய்யாதீர்கள் என அறிவுரை செய்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிப்பதற்கோ, எழுதுவதற்கோ, கண்டண்ட் கிரியேட் செய்வதற்கோ, நேர்காணலுக்கோ, ஆசிரியர் பணிக்கோ, சிறப்பு விருந்தினராகவோ என எந்த வேலைக்கு என்னை அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவோம் என்று பேச ஆரம்பியுங்கள். என்னை வைத்து நீங்கள் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும். லாப நோக்கில் அல்லாமல் லட்சிய ஆர்வத்திற்காக நீங்கள் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதில் நான் இலவசமாக செய்து உங்கள் லட்சயத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், அந்த பதிவில் சில நடிகர்கள் நேர்காணல் கொடுக்க கூட பணம் வாங்குகிறார்கள் அப்படியென்றால் நான் மட்டும் என்ன முட்டாளா? என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.