குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி கவனம் பெறாமல் சென்ற படம் ராதா கிருஷ்ணா. குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் உருவாகி இருந்த இந்த படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படததால் பெரிதாக பேசப்படவில்லை.
சிறுவன் கிருஷ்ணா (ஆதித்யா), யானை (ராதா) இருவரும் உடன்பிறவா சகோதரர்களாக வளர்கிறார்கள். பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்கிறார்கள். கிருஷ்ணா தனது சகோதரனும் நண்பனுமாகிய யானையை நினைத்து மிகவும் ஏங்குகிறான். பின்னர் யானையை தேடி காட்டுக்குள் தன்னந்தனியே பயணத்தை மேற்கொள்கிறான். ராதாவும் கிருஷ்ணனும் மீண்டும் சந்திக்கிறார்களா என்பதே கதையின் முடிவு.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அழகான இயற்கை காட்சிகள், காட்டுக்குள் வரும் பிரச்சினைகளை காட்டி இருந்தது. புகழ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நாளை ( நவம்பர் 13) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில், தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.