புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிக்பாஸ் சீசன் 6-ல் சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலெட்சுமி கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ரக்ஷிதாவின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ரக்ஷிதாவின் சீரியல் கேரியரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. விஜய் டிவி சீரியலிலிருந்து திடீரென விலக்கப்பட்டார். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் அவர் நடித்து வந்த தொடர் ஹிட் அடித்த போதும் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்துள்ளார். குடும்ப வாழ்வில் பிரச்னை காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரக்ஷிதா முதன் முறையாக தன் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் குயின்சி மற்றும் கதிருடன் பேசிய ரக்ஷிதா திருமணம் பற்றி பேசும்பொழுது, 'நம்ம அடுத்த ஜென்ரேஷன் எவ்ளோ கஷ்டப்படுவங்க. அவங்களுக்கு திருமணம் ஒரு கான்செப்ட்டே கிடையாது. நான் குடும்பம் குடும்பம்னு சொல்லியே எல்லாத்தையும் இழந்தேன். ஒரு பார்ட்டி கூட போகமாட்டேன். எல்லா பேரண்ட்ஸூம் தங்களோட குழந்தைன்னு பெண் குழந்தைகளுக்கு எல்லாத்தையும் கொடுத்து வளத்துட்றாங்க. ஆனா, மேரேஜ்க்கு அப்புறம் அவங்களுக்கு எதாச்சும் செய்யனும்னா அவர்ட்ட கேட்கனுமா? வேண்டாமான்னு யோசிக்க வேண்டியிருக்கு. அம்மா அப்பாவ வேறு பார்த்துக்குவா?. நாம தானே பாத்துக்கனும். ஆனால், சில கட்டுபாடுகளால அவங்களுக்கு எதுவுமே செய்யமுடியாம போய்டுது. நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் என்னுடைய அப்பா அம்மாக்கு கொடுக்கக்கூடாதா?. அதை கேட்க நீ யார்ன்னு தோணும். நான் அந்த மாதிரியான நிலைமைய ரொம்ப மோசமாவே அனுபவிச்சிருக்கேன்' என்று கூறுகிறார்.
கணவரை பிரிந்த ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் தான் அதற்கான காரணத்தை முதல் முறையாக ஓப்பன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.