நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமான பிளாக் பாண்டி, தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, ரத்ததானம் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பொருளாதார சரிவில் சிக்கியுள்ள இலங்கை மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு இவர் தனது உதவும் மனிதம் அமைப்பின் வழியே சில உதவிகளை செய்தார். இதனால் பிளாக் பாண்டிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு சென்றீர்கள்? என போலீஸ் தரப்பிலும், வருமானவரித்துறை தரப்பிலும் பிளாக் பாண்டியை விசாரித்து வருகின்றனர். மேலும், உதவும் மனிதம் டிரெஸ்டுக்கு வழங்கப்பட்ட 80ஜி வருமான வரி சலுகை ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சிக்கல் குறித்து பிளாக் பாண்டி, 'நான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ சென்றேன். இவ்வளவு சட்ட சிக்கல்கள் வரும் என்று தெரியாது. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார். பிளாக் பாண்டியின் உதவும் குணம் இப்படி அவருக்கே பிரச்னையானதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.