கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமான பிளாக் பாண்டி, தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, ரத்ததானம் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பொருளாதார சரிவில் சிக்கியுள்ள இலங்கை மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு இவர் தனது உதவும் மனிதம் அமைப்பின் வழியே சில உதவிகளை செய்தார். இதனால் பிளாக் பாண்டிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு சென்றீர்கள்? என போலீஸ் தரப்பிலும், வருமானவரித்துறை தரப்பிலும் பிளாக் பாண்டியை விசாரித்து வருகின்றனர். மேலும், உதவும் மனிதம் டிரெஸ்டுக்கு வழங்கப்பட்ட 80ஜி வருமான வரி சலுகை ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சிக்கல் குறித்து பிளாக் பாண்டி, 'நான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ சென்றேன். இவ்வளவு சட்ட சிக்கல்கள் வரும் என்று தெரியாது. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார். பிளாக் பாண்டியின் உதவும் குணம் இப்படி அவருக்கே பிரச்னையானதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.