மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் உள்ளத்தை அள்ளித்தா. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜமீலா என்ற தொடரை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை பற்றிய தொடராக ஒளிபரப்பாக இருக்கறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆட்டோ ஓட்டி, ஆட்டோ ராணி என்ற பெயரெடுத்துக் கொண்டு ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை தனியொருத்தியாக நின்ற காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை களம் என்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் வேகமாக கொண்டு சேர்த்து பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாத கேரக்டராக ஆட்டோ ராணி கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தொடராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.