சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா?. புஷ்பா படத்தின் புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை மா.பா.கா ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளர் வைக்கும் பணத்தை விட எதிரில் ஆடுகிறவர் அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும். இப்படி போகும் இந்த விளையாட்டு. இந்த புதிய கேம் ஷோம் வருகிற (செப்டம்பர்) 4ம் தேதி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.